Wednesday, December 25, 2013

தியானம் செய்முறைகளும் பலன்களும் ...

தியானம் என்பது சிந்திப்பதோ, மந்திரங்களை உச்சரிப்பதோ அல்லது பிரார்த்தனை செய்வதோ அல்ல. meditation

என்னங்களிடமிருந்து விடுதலை பெற்று மனமானது வெற்றிடமாயிருத்தலே தியானம் ஆகும். தியானம் என்றால் நம் சுவாசத்தின் மீது நமது முழு கவனத்தை வைத்திருப் பதாகும். அவ்வாறு மூச்சை கவனித்துக் கொண்டிருந்தால் நமது மனம் எந்த சிந்தனையுமின்றி சாந்த நிலையை அடையும்.
மனம் அந்நிலையை அடையும் போது அளவற்ற விஸ்வ சக்தி நம் தலையில் உள்ள பிரம்ம மந்திரத்தின் மூலம் உடலில் பாய்கிறது. அந்த விஸ்வசக்தி நமது நாடி மண்டலத்தை சுத்திகரித்து நமது மூன்றாம் கண்ணை இயக்குகிறது.
இந்த விஸ்வசக்தியின் மூலமாக நமக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் அமைதியான மனநிலையும் மற்றும் பல ஆன்மிக அனுபவங்களும் தரும்.

தியானத்தின் பலன்கள்:

1) வியாதிகளிலிருந்து நிவாரணம்
2) வியாதி வராமல் தடுக்கும் சக்தி பெருகி, நிரந்தர ஆரோக்கியம் பெறுதல்.
3) தேவையற்ற பழக்க வழக்கங்கள் மடிந்து மறைதல்
4) மனம் எப்பொழுதும், அமைதியான, ஆனந்த நிலையில் இருத்தல்
5) மற்றவருடன் தோழமை, நட்பு வளர்ந்து, செம்மைப்படுதல்.
6) எண்ணிய எண்ணம் வலுப்பெற்று, நிறைவேறுதல்.
7) ஞாபக சக்தி அதிகரிப்பு.
இந்த வாழ்க்கையின் இலட்சியத்தை குறிக்கோளை - தெள்ளத் தெளிவாக அறிதல்.
9) வேலைத்திறன் கூடுதல், மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்தல்.
10) மேலுலக குருமார்களுடன், தியானத்தில் தொடர்பு கொண்டு, அவர்கள் அறிவுரைப்படி தீராத பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்.
11) சூட்சும சரீர யாத்திரை, வருமுன் கண்டறிதல் இன்னும் பற்பல தியான அனுபவங்கள் ஏற்பட்டு தன்னையறிந்து, முக்தி பெறுதல்.
12) முன் ஜன்மங்களை தியானத்தில் கண்டறிதல்.
13) எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் (awareness) செயல்படல்.
மாணவ, மாணவியருக்கு:
1) உடல் ஆரோக்கியம் அடையும்.
2) தேவையற்ற பழக்கங்கள் மடிந்து மறையும்.
3) பாடத்தில், கூடுதல் கவனம் ஏற்படும்.
4) ஞாபக சக்தி வளரும்.
5) எல்லோருடனும் சுமூக உறவு ஏற்பட்டு செம்மை பெறும்.
6) உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் கலைத்திறமை, மற்றும் பற்பல திறமைகளை கண்டறிந்து, வளரச் செய்ய இயலும்.
7) பயம், போன்ற தேவையற்ற உணர்ச்சிகள் நம்மைவிட்டு அகலும். தன்மைபிக்கை பன்மடங்காகும்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாமல் மனம், குதூகலம், அமைதி, திருப்தி அடையும்.
9) மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்.
10) நஷ்டங்களை மற்றும் தோல்விகளைக் கண்டு தளராத மனவலிமை ஏற்படும்.
11) அளவான தூக்கம் மற்றும் பேச்சு உண்டாகும். தேவைக்கதிகமான தூக்கத்திலும், பேச்சிலும், நேரம் வீண் போகாது.
12) சூட்சுமமானவற்றையும் புரிந்து கொள்ளும் நுண்ணறிவு வளரும்.
13) தேர்ந்தெடுக்கும் திறன் (Power of choice) எண்ணத்தின் வலிமை (thought power) இவை உண்டாகும்.
கர்ப்பினிப் பெண்களுக்கு - தியானம் மிக மிக அவசியம்
1) தாய், சேய் நலம் உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராகும்.
2) மன வலிமை, மன அமைதி ஏற்படும்.
3) பயம் அகன்று, தைரியம் உண்டாகும்.
4) சுகப் பிரசவம் உண்டாகும். பழைய ஆரோக்கிய நிலைக்கு உடனடியாகத் திரும்பலாம்.
5) குழந்தைக்கு ஆன்மீக நெறியான அடிப்படை பாடம், பிறக்கும் முன்பே உருவாகி, வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும்.

தியானம் செய்யும் முறை:
தியானம் செய்வதற்கு சுகஸ்திர ஆசனத்தில் அமர வேண்டும்.
தரையிலோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும்.
பாதங்களை ஒன்றின் மீது ஒன்றாக இணைத்துக்கொள்ளவும்.
இரு கைவிரல்களையும் ஒன்றுடன் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். உடலை இறுக்கமாக இல்லாமல் தளர்வாக இயல்பாக இருக்கவும்.
பின்பு கண்களை மூடிக் கொண்டு நம்மில் இயல்பாகவும், இயற்கையாகவும், மென்மையாகவும் நடக்கும் சுவாசத்தின் மீது கவனத்தை செலுத்த வேண்டும். மனம் அலைபாயும் போதெல்லாம் அவற்றை தவிர்த்து மறுபடியும் நம் கவனத்தை சுவாசத்தின் மீது மட்டும் செலுத்தவும்.
தியானம் மிக எளிமையானது. தியானம் செய்வதில் எவ்வித சிரமமும் கிடையாது.
அனைத்து வயதினரும் செய்யலாம். தியானம் தவறாமல் செய்ய வேண்டும். குறைந்தது முப்பது நிமிடமாவது செய்ய வேண்டும் .
"நம் வாழ்வின் வெற்றியை நமது முயற்சியால் நமக்கு நாமே பெற்றுக்கொள்ளும் வரப்பிரசாதமே தியானம்”

No comments:

Post a Comment