Friday, February 21, 2014

ஏழு முக ருத்ராட்சம்..!

ஏழு முக ருத்ராட்சம் சூரியன், சப்த மாதர்கள், ஆதிசேஷன், காமதேவன், முருகன் ஆகியோரின் அருள் பெற்றது. அனந்தன் அருளும் இணைந்தது. அநந்தன் என்பது ஆதிசேஷனையும், அந்தம் என்பது இல்லாத பரமனையும் குறிக்கும்.rudram
எண்களில் மிக பெரிய சக்தி படைத்த எண் ஏழு ஆகும். இந்த மணியை அணிபவர்களுக்கு, பாம்பு, தேள் உட்பட விஷ ஜந்துக்களால் ஆபத்து நேராது என்று பத்ம புராணம் கூறுகிறது.
திருடுதல், தகாத உறவு, போதை பழக்கங்களால் உண்டான பாவத்தை போக்கும்.
சப்தமாதர்கள் ( பிராமி, கௌமாரி, மாஹேந்திரி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி, வாராஹி, சாமுண்டி) அனைவரது அருள் பெற்றதால் இதை அணிபவ ருக்கும், பூஜிப்பவருக்கும் எல்லா செல்வங்களும் கிட்டும். துரதிர்ஷ்டத்தை நீக்கும். நாக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
இந்த மணி புதையல் போன்ற மறைந்துள்ள செல்வங்களைப் பெற்றுத்தரும். பகைவரை அழிப்பதோடு, எதிர்பாலினரை வசியப்படுத்தும். சப்தத ரிஷிகளின் அருளை பெற்று தரும்.
ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதாலோ, பூஜிப்பதாலோ சந்தியா வந்தனம், காயத்ரி மந்திரம் ஜெபித்தல் ஆகிய வற்றின் பலனைப் பெறலாம்,
இதன் ஆதிக்க கிரகம் சனி.
யார் அணியலாம்:
எல்லாவித தொழிலகள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்களும் ஏழு முக ருத்ராட்சத்தை அணியலாம். வியாபாரத்தில் பெரிய வெற்றியை தரும். ஏழு முக ருத்ராட்சதின் ஆற்றல் அளப்பரியது. அதை எல்லாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே எட்டுமுக ருத்ராட்சத் தொடு சேர்த்து அணிந்து கொள்வது சிறந்தது. பூஜை அறையிலும் வைத்து வணங்கலாம்.
பணப்பெட்டி, பணப்பை போன்றவற்றில் இம்மணியை வைத்து கொள்வதால் பணம் பெருகும்.
54+1,108+1 சேர்க்கையில் ஜெபமாலையாக உபயோகிக்கலாம். உடலிலும் அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சமும் ஜோதிடமும்:
இது சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்றது. சனியின் தீய பார்வையால் விளையும் திடிர் நோயுறுதல், மலட்டுத் தன்மை, சளி போன்றநோய்கள் குணமாகும். மேலும் வாழ்வில் அவநம்பிக்கை, சாதனைகள் புரியத் தடை, நீண்டநாள் நோய்கள், வறுமை நீங்கும்.
ஏழு முக ருத்ராட்ச மந்திரம்:
ஓம் ஹம நமஹ

No comments:

Post a Comment