ஒருவர் பிறந்த நாள் தேதி, நேரம், விநாடி அடிப்படையிலும், பஞ்சாங்க அடிப்படையிலும் ஜாதகம் உருவாக்கப்படுகிறது. 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எண், நிறம், கல், அதிதேவதை, பரிகார மரம் என அனைத்தும் உண்டு அதுபோல் மரங்களும் உண்டு
27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள்:
அஸ்வதி - எட்டிமரம்,
பரணி-நெல்லி,
கார்த்திகை - அத்தி,
ரோகிணி - நவ்வல்,
மிருகசீர்ஷம் - கருங்காலி,
திருவாதிரை - செங்கருங்காலி,
புனர்பூசம் - மூங்கில்,
பூசம் - அரசு,
ஆயில்யம் - புன்னை,
மகம் - ஆல்,
பூரம்- பலாசம்,
உத்திரம் - அலரி,
ஹஸ்தம் - அத்தி,
சித்திரை - வில்வம்,
ஸ்வாதி - மருது,
விசாகம் - விளா,
அனுஷம் - மகிழ்,
கேட்டை - பிராய்,
மூலம் - மரா,
பூராடம் - வஞ்சி,
உத்திராடம் - பிலா,
திருவோணம் - எருக்கு,
அவிட்டம் - வன்னி,
சதயம் - கடம்பு,
பூரட்டாதி - தேவா,
உத்திரட்டாதி - வேம்பு,
ரேவதி- இலுப்பை
என 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களாகும்.
அந்தந்த நட்சத்திரகாரர்கள், அவர்களுக்குடைய மரங்களை நட்டால், அவர்களுக்குடைய கர்மவினைகள் தீரும்.ஜாதகத்தில் தோசங்கள் இருந்தால் குறையும்.
பொதுவாகவே மனிதர்களுக்கு சிலரை பிடிக்கும், பலரை பிடிக்காமல் போகும். அவர்கள் செய்யும் செயல்களோ, சேவைகளோ பெரும்பாலும் சுயநலத்தின் வெளிப்பாடு இருக்கும். ஆனால் மரமோ நல்லவர்கள், தீயவர்கள் அனைவருக்கும் காற்றையும், நிழலையும் தருகிறது. பறவைகளுக்கு புகலிடமாக இருக்கிறது. எத்தனையோ மனங்களை குளிரவைக்கிறது. ஆதலால் அந்தந்த நட்சத்திரகார்கள் நடும் மரம் மேலும், மேலும் புண்ணியத்தை கொடுக்கும்
No comments:
Post a Comment